மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் 238 மையங்களில் இன்று நடைபெற்று முடிந்தது.
நீட் தேர்வுக்கு சுமார் 1.18 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். சில இடங்களில் போதிய போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
முகக்கவசம், கையுறை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவை தேர்வறைக்குள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது. கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு அறைகளில் தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது
பல மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழில் எழுதி வைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பெற்றோருக்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பல்வேறு மையங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பல இடங்களில் மாணவர்கள் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டாலும், உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதிய உணவை உட்கொள்ளாமல் தேர்வை எதிர்கொள்ள நேர்ந்தது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். சில மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் சிலர் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்