“நடந்தாய் வாழி காவேரி” காவிரி ஆற்றுக்கு வந்த சோதனை... திருச்சியின் பரிதாப நிலை

திருச்சியின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால், மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
திருச்சி காவிரிப்பாலம்
திருச்சி காவிரிப்பாலம்pt web

கோடை வெப்பம் அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அங்கிருக்கும் நீர் நிலைகளின் நிலை என்ன என்பது குறித்து புதிய தலைமுறையின் செய்தியாளர்கள் வழங்கியுள்ளனர்.

திருச்சியைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் காவிரிக்கரைகள் மிகவும் செழித்திருந்த நிலையில், தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மிகவும் வறண்டு காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்திற்கு மேட்டூரில் இருந்து வரக்கூடிய தண்ணீர், முக்கொம்பு மேலணைக்கு வந்தபிறகு, காவிரி கொள்ளிடம் என இரண்டாக அதைப் பிரித்து அனுப்புவார்கள். ஏனெனில் இங்கு அணையோ அல்லது தண்ணீரை தேக்கிவைக்கும் வசதிகளோ கிடையாது. மேட்டூரில் இருந்து வரக்கூடிய நீரை பிரித்துமட்டுமே அனுப்பமுடியும்.

திருச்சி காவிரிப்பாலம்
சுட்டெரிக்கும் கோடை... சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்குமா? ஏரிகளின் நிலை என்ன?

அவ்வாறு காவிரி ஆற்றில் சுமார் 60,000 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 3.5 லட்சம் கன அடி நீரும் பிரித்து அனுப்பமுடியும். ஆனால் தற்போதைய சூழலில் காவிரி ஆற்றில் 178 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

இந்த நீர்தான் திருச்சி மாவட்ட மக்களுக்கு அடிப்படை நீராதரமாக விளங்கிறது என்பதால், திருச்சியில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறாது.

மட்டுமன்றி திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு இயல்பை விட மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் 192 (342.1) மழை அளவு பதிவாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் திருச்சியில் 44% இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. மழை அளவு குறைந்ததன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 1.42 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் 3.99 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், 5.41 மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது.

இப்படியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு, மழை அளவு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதே நிலை இன்னும் நீடிக்கும் பட்சத்தில் திருச்சியில் மக்களுக்கான குடிநீர் வினியோகம் குறையும் நிலை ஏற்பட்டும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com