அப்பாடா... 14 மாவட்டங்களில் ’கன’மழை பெய்ய போவுதாம்...

ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உட்பட வெயில் வாட்டியெடுத்த 14 மாவட்டங்களுக்கு நற்செய்தியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன மழைக்கான அறிவிப்பு
கன மழைக்கான அறிவிப்புpt web

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக மே 8-ஆம்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
மழைpt desk

மே 9-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை
மழைpt web

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com