இந்தியாவுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடர்தான் ரோகித் சர்மாவுக்கு முக்கியமா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு 6 வாரம் ஓய்வு வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் களமிறங்கினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் "கடந்த சில நாள்களுக்கு முன்புதான் இந்திய அணியின் மருத்துவர் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் அவர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் நீடிக்கிறார் விளையாடுகிறார். இது மிகவும் விநோதமாக இருக்கிறது. இந்தியாவுக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கியமான ஒரு வீரர்" என்றார்.
மேலும் "என்னுடைய கேள்வி என்னவென்றால் ரோகித் சர்மாவுக்கு, இந்தியாவுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் முக்கியமானதாக படுகிறதா ? நாட்டுக்காக விளையாடுவதைவிட கிளப்புக்காக விளையாடுவதை விரும்புகிறாரா. இது தொடர்பாக பிசிசிஐ நிச்சயம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிசிசிஐ மருத்துவர் ரோகித்தின் காயத்தை சரியாக பரிசோதித்து சொல்லவில்லையா " என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார் திலீப் வெங்சர்கார்.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!