கீழடியில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகளும் இன்று மூடப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கெனவே 4 கட்டங்களாக நடந்து முடிந்த அகழாய்வில் பழந்தமிழர்களின் நாகரிகத்துக்கு சாட்சியாக ஏராளமான பொருள்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13-ஆம் தேதி கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அகழ்வாராய்ச்சிக்காக 54 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச்சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என, பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான 800-க்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன.
அகழாய்வு நடத்தப்படும் பகுதிகளை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஓரிரு வாரங்களில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கீழடியில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட 54 குழிகளும் இன்று மூடப்பட உள்ளன. 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!