புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொலை செய்த இரண்டு கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி வெல்டிங் குமார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்தார். அப்போது சிறையின் உள்ளே 8 கைதிகளால் அவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புழல் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறை கண்காணிப்பாளர் புகார் அளித்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
10 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதலாவது மற்றும் 3-வது குற்றவாளிகளான அன்பு மற்றும் கார்மேகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் இருவருக்கும் தலா 1000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். 2-வது குற்றவாளி ராஜா ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், சுந்தரம், கார்த்திக், கதிர்வேல், பழனி, ரமேஷ் ஆகிய 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!