18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு, திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தகுதி நீக்கம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸிற்கு பதில் அளிக்க போதிய அவகாசம் கொடுக்காமல், ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.
முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கவே, தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்ககோருவதாகவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வரும் 20 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை