வாட்ஸ் அப்பில் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் பெயர்கள், விவரங்கள் இன்னும் அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங், மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நவம்பர் 18-ஆம் தேதி வாட்ஸ் அப் நிறுவனம் பதில் அளித்ததாகவும், கூடுதல் விவரங்கள் தருமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
ஆனால் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் பெயர்கள், விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பெகாசஸ் மென்பொருள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விவரங்கள் கேட்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!