கோவை: ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசு வாழ்க்கை - போலி ரசீது மூலம் சிக்கிய நபர் கைது

இந்தியா முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கோவையில் சிக்கினார்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஐஷ்வர்யா

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் போராடா சுதீர். இவர், கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஹோட்டலுக்கு வந்த அவர், போலியான ஒரு பில்லை காண்பித்து இரவு அங்கு தங்கியுள்ளார். இதையடுத்து நேற்று காலை ஹோட்டலை காலி செய்த அவர் செல்ல முயன்றுள்ளார்.

Arrested
Arrestedfile

அப்போது ஹோட்டல் நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவர், தான் நேற்றே பணம் செலுத்தி விட்டதாக போலியான ரசீதை காண்பித்துள்ளார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் கணக்கை சரி பார்த்த போது அவர் போலியான ரசீதை காண்பித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஹோட்டல் சார்பில், பந்தைய சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

Accused
திருப்பத்தூர்: திருமணமான ஒரே ஆண்டில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு

அதன் பேரில் காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் இந்தியா முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போலியான முகவரி மற்றும் தகவல்களை கொடுத்து தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com