தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி ஒருவர் ஆந்திராவில் பிடிபட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியாக இருப்பவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது வழக்கறிஞர் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் சுரேஷ் மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளன. தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறைக்கு சென்று வெளிவந்துள்ள சுரேஷ், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இதனால் புளியந்தோப்பு போலீசார் கடந்த சில நாட்களாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, புளியந்தோப்பு தனிப்படை போலீசார் ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜேஷ் ஆகியோரை பிடிக்க ஆந்திர சென்றனர். அங்கு இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்