முழங்கால் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னும் பிரச்னை தொடர்ந்ததால் 2 வது முறையாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கும் அவரை ’சின்ன தல’ என்று அழைக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக, இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், 4 முதல் 6 வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது அறுவை சிகிச்சை குறித்து ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
‘’ அறுவைச் சிகிச்சை முடிந்து குணமாகிவருகிறேன். மருத்துவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி. முழங்கால் பிரச்னை 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். கடந்த சில வருடங்களாக மீண்டும் பிரச்னை. கடுமை யான வலி. பயிற்சியாளர்கள் எனக்கு அதற்கான உதவிகளை செய்தாலும் பிரச்னை முடியவில்லை. இதனால் இரண்டாவது முறையாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கடினமான ஒன்று. சிகிச்சைக்குப் பின் சில மாதங் கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது தெரியும். இருந்தாலும் மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?