உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அம்மாநிலத்தின் கிழுக்கு பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதனால் இங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 71 வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் யுக்தியை பிரியங்கா காந்தி தெளிவு படுத்தியுள்ளார். இது குறித்து அவர், “இம்முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவின் வாக்குகளை பிரிப்பார்கள். ஏனென்றால் எந்தத் தொகுதியில் எல்லாம் எங்கள் வேட்பாளர்கள் பலமாக இருக்கிறார்களோ அங்கு அவர்கள் வெற்றி பெறுவார்கள். மற்ற இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் பாஜகவிற்கு வரும் வாக்குகளை பிரிப்பார்கள். இதனால் பாஜக இம்முறை உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் தோல்வியைத் தழுவும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 71 இடங்களும், காங்கிரஸ் 2 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களும், அப்னா தளம் கட்சி 2 இடங்களும் வென்றிருந்தன. வரும் 6ஆம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி உள்ளிட தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?