பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும். கைது செய்யப்பட்ட 4 பேரை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகி புகாரளிக்கலாம்.
இந்தச் சம்பவத்தில் அரசியல் கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை. தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையை சொல்வதென்றால், தன்னுடைய தொகுதி என்பதால் அவரே (பொள்ளாச்சி ஜெயராமன்) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னிடம் வலியுறுத்தினார்.
புகாரளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசு, சபரீஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தன. பொள்ளாச்சி நாகராஜ் ஜாமீனை எதிர்த்து தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.
Loading More post
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!