Published : 10,Apr 2017 02:18 AM
கூட்டுச் சதியால் தேர்தல் ரத்து: டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்
சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையத்தின் கூட்டுத் சதியால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தொகுதிக்கு சென்று மக்களை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டு சதியினாலே தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.