ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.399க்கு மேல் ப்ளான்களில் பிஎஸ்என்எல் புதிய ஆஃபரை அளித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதற்குக் காரணம் ஜியோ வழங்கிய ஆஃபர். இலவச டேட்டா, இலவச போன்கள் என ஜியோ வழங்கிய மெகா ஆஃபர்களில், மற்ற சிம் நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. ஜியோவின் இலவச சேவைகள் முடிந்த பின்னரும், குறைந்த விலையில் ஜியோ சேவைகளை வழங்கி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மற்ற சிம் நிறுவனங்களும் தங்கள் ரிசார்ஜ் ப்ளான்களில் பல புதிய ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ரூ.399க்கும் மேலான ப்ளான்களில் உள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 100 இலவச மெசெஜ்களை வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைப்படி ரூ.399க்கு மேல் உள்ள ப்ளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் கடைசி நாள் வேலிடிட்டி முடியும் வரை தினமும் 100 மெசெஜ்களை இலவசமாக அனுப்ப முடியும். ரூ.399க்கு கீழ் உள்ள ப்ளான்களை பயன்படுத்துவோருக்கு வேலிடிட்டி முடியும் வரை மொத்த உள்ள நாட்களுக்கும் 100 மெசெஜ்கள் அனுப்ப முடியும். இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியா முழுவதும் கொண்டுவரப்படவுள்ளது.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்