நாட்டின் வடமாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் அதிகரித்துள்ள பணத் தட்டுப்பாட்டிற்கு 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஏடிஎம்மில் நிலவிவரும் பணத்தட்டுபாடு பிரச்னைக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தப் பணத் தட்டுப்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. ஏடிஎம் பண நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்துள்ளதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் இது தற்காலிகமான பாதிப்பு மட்டுமே என்றும் கூறியுள்ளார். விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. நாட்டில் நிதி அவசரம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சிகள் இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை பகுதி இரண்டா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளன. பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைத்து பணத்தையும் நிரவ் மோடிக்கு கொடுத்துவிட்டாரா..? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே மத்திய வங்கி அதிப்படியான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியிலும் இறங்கியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதை விட அதனை எடுக்கும் விகிதம் அதிகரித்ததுதான் பண நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமான கூறப்படுகிறது. திடீரென பலரும் அதிக பணத்தை எடுப்பதற்கான காரணங்களாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.
• பயிர் கொள்முதல் பருவம்
• இது விழா மற்றும் திருமண காலம்
• நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதா குறித்த அச்சம்
• கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்
• 2000 ரூபாய் நோட்டு பதுக்கல்
• புது நோட்டுக்கு ஏற்ப முழுமையாக மேற்கொள்ளப்படாத ஏடிஎம்மின் தொழில்நுட்ப வசதி
மேற்கூறிய காரணங்களால் ஏடிஎம்மில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாகவே பணம் குறித்த அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் எனவே இந்த மாதத்தின் தொடக்கத்தில் பண விநியோகம் அதிகரிக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. வங்கிகளில் தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாகவும் விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் எனவும் நிதியமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'