சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 24 தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் 1.2 கோடி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மனிதவள மேம்பாட்டு துறையில் கீழ் நேரடியாக சிபிஎஸ்இ இயங்குகிறது. மத்திய அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தும் தேர்வில் இப்படியொரு தவறு நடைபெற்றுள்ளது. இந்த தவறை ஒருபொழுதும் எளிதானதாக எடுத்துக் கொள்ள முடியாது.
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ தயாரிப்புகளுடன் மாணவர்கள் தேர்வு எழுதியிருப்பார்கள். மீண்டும் ஒருமுறை தேர்வுக்கு தயாராவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயம். யாரோ சிலர் செய்த தவறுக்கு, தேர்வு எழுதிய சுமார் 25 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மாணவர்களோடு சேர்த்து அவர்களின் பெற்றோர்களுக்கும் இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.
மார்ச் 26-ம் தேதி 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்ட போதே சுதாகரித்து இருந்தால், 10-ம் வகுப்பிற்கான கணித தேர்வின் போது மீண்டும் அப்படி நடந்திருக்காது. இது சிபிஎஸ்இ அமைப்பின் அலட்சியத்தையே காட்டுகிறது. பிரதமர் மோடி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதில், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவர்கள். அப்படி தயாராகும் மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். நீட் போன்ற தேர்வுகளையே சிபிஎஸ்இ தான் நடத்துகிறது. இதனை நம்பித்தான் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த விவகாரம் சிபிஎஸ்இ மீதான நம்பிக்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!