Published : 13,Mar 2018 11:51 AM
பாட்டிலுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகள்: ஒரு அதிர்ச்சி சம்பவம்

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் கண்ணாடி பாட்டில்களில் குழந்தைகளை புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை சமீபத்தில் ஒருவர் வாங்கியுள்ளார். வாங்கிய வீட்டை புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளார். வீட்டை புதுபிக்கும் பணிக்காக வேலைக்கு ஆட்களை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது தரையில் கண்ணாடி பாட்டிலுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை கண்டு அந்த வேலைக்காரர்கள் மிரண்டுப் போயினர். அங்கு பாட்டிலில் நான்கு குழந்தைகள் தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது குழந்தைகளின் உடல்களை பாதுகாக்க சில வேதிப்பொருட்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதை செய்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை. அந்தக் குழந்தைகள் யாருடையது என்பதும் கண்டறியவில்லை.