மும்பையை சேர்ந்த பெண் கணக்கு அதிகாரி ஒருவர் பான் கார்டை புதுப்பிக்குமாறு வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.1.80 லட்சத்தை இழந்துள்ளார்.
மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் 34 வயது பெண்ணிடம், பான் கார்டை புதுப்பிக்குமாறு லிங்க் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, சைபர் மோசடி செய்பவர் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளார். அவரது வங்கி விவரங்களை பெற்றுக்கொண்டு, அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளார்.
மே 9 அன்று, தனது அலுவலகத்தில் இருந்தபோது, தனது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியைப் பெற்றுள்ளார் அந்த பெண் அதிகாரி. பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. லிங்கை உண்மையென நம்பி அந்தப் பெண் இணைப்பைக் கிளிக் செய்துள்ளார். இதன்பின் HDFC வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது. அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்யுமாறு கேட்க, அதை பதிவிட்டுள்ளார் அந்த பெண்.
அவர் போனில் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெற்ற பிறகு, அவள் OTP மற்றும் அவளது பான் கார்டு விவரங்களையும் பதிவு செய்துள்ளார். விரைவில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்து தனது வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததையடுத்து, அந்த பெண் தனது வங்கியை அழைத்து தனது வங்கிக் கணக்கை பிளாக் செய்துள்ளார். பின்னர் புகார் அளிக்க சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தை அணுகினார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 419 மற்றும் 420ன் கீழ் ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும் ஏமாற்றியதற்காகவும் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 சி (அடையாளத் திருட்டு) மற்றும் 66 டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
Loading More post
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'