ஜொமோட்டோ நிறுவனத்துக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜொமோட்டோ பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. தற்போது 52 வார குறைந்தபட்ச விலையில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை குறைந்தபட்சமாக ரூ.57 ரூபாய் வரை இந்த பங்கு சரிந்தது. இதனால் ஜொமோட்டோவின் சந்தை மதிப்பு ரூ.45,381 கோடியாக குறைந்தது.
நவம்பர் மாதத்தில் இந்த பங்கு உச்சபட்சமாக 169.10 ரூபாய் வரை சென்றது. அப்போது சந்தை மதிப்பு 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதில் இருந்து இப்போது சுமார் 87,000 கோடி ரூபாய் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த பங்கு ரூ76 க்கு ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை உயர்த்தி இருப்பதால் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஜொமோட்டோ நிறுவனம் இன்னும் லாப பாதைக்கு திரும்பவில்லை என்பதால் பங்கு சரிந்துவருகிறது. அடுத்த நிதி ஆண்டில்தான் இந்த பங்குகள் லாப பாதைக்கு திரும்பும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?