ஈரோடு அருகே திருமணமாகி இருபதே நாளில் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பட்டதாரி உமா மகேஸ்வரி. இவருக்கும் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுங்கத்துறையில் பணிபுரியும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த மே மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு வரதட்சணை வேண்டாம் என தெரிவித்த மணிகண்டனின் தாயார் மணி, திருமணத்திற்குப் பிறகு 40 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனுக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணமாகி 20 நாளில் கணவர் மணிகண்டன் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக உமா மகேஸ்வரி எஸ்பி அலுவலகம், மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், தம்பதியினருக்குள் நடக்கும் அந்தரங்க விஷயங்களை, கணவர் மணிகண்டன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருவதாகவும் இதனால் கணவர் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!