சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் விலை உயர்வினை ஆராயும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ 18.62 காசுகள் விலை உயர்ந்துள்ளது தெரியவருகிறது. சென்னையில் நடப்பு நிதியாண்டின் ஜனவரி முதல் நாளன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 86.51 -க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த மாதங்களில் பெட்ரோல் விலை ஏறுமுகத்திலேயே காணப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி அதன் விலை 102 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியில் 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்ட நிலையில், செப்டம்பரில் அதன் விலை 99 ரூபாய் 8 காசுகளாக விலை குறைந்து காணப்பட்டது. அடுத்து வந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை 99 ரூபாய் 58 காசுகளாக இருந்த நிலையில், மாத இறுதியில் கணிசமாக உயர்ந்து இன்று ஒரு லிட்டர் 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: சென்னையில் ரூ.105ஐ தாண்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் கவலை
நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் 4 காசு அதிகரித்துள்ளது. சென்னையில் நடப்பு நிதியாண்டின் தொடக்க நாளில் டீசல் ஒரு லிட்டர் 79 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலும் டீசல் விலை ஏறுமுகத்திலேயே காணப்பட்டது. ஜூன் மாதத்தில் டீசல் ஒரு லிட்டர் 90 ரூபாயைத் தாண்டியது.
ஜூலையில் ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 38 காசுகளாக இருந்தது. அக்டோபர் 1ஆம் தேதி 94 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்