டிடிவி தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.
டிடிவி தினகரன் வெளியிட்ட நியமன அறிவிப்புகள் செல்லாது, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதே கட்சியின் சட்டத்துக்கு விரோதமானது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் அதிமுக அம்மா அணி சார்பில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நியமக்கப்பட்ட நிர்வாகிகள் 27 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் என்ற முறையில்தான் கையெழுத்திட்டுள்ளார்.
சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையனும், பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. இது, ஜெயலலிதாவால் அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட மதுசூதனனும் பொருளாளராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அதே பொறுப்புகளில் நீடிக்கிறார்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் உள்ளது.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!