தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.
முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில், 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னையிலிருந்து அவர்களை மீட்க சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து காவல்துறை தலைமை இயக்குநருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் மண்டல ஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதாவது, சுழற்சி முறையில் 20 சதவிகித காவலர்களுக்கு விடுப்பு வழங்குமாறு டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கெனவே 10 சதவிகித காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்