சுமார் 3,700 கோடி ரூபாய் வங்கி மோசடி புகார்கள் தொடர்பாக நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொதுத்துறை வங்கிகள் அளித்த புகார்கள் மீது பதிவு செய்யப்பட்ட 30 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் 11 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருவாரூர், வேலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. ஏமாற்றுதல், நிதியை தவறாக பயன்படுத்துதல், போலி ஆவணங்கள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடிப்படையில் சிபிஐ சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கெய்த்தன் மின்விசிறி தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலை மேம்படுத்துவதற்காக 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தில் பல்வேறு வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும், வாங்கிய கடனை உரிய காரணத்துக்காக பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்துவதாகவும் வங்கிகள் கண்டறிந்தன.
266 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிய வந்தது. கெய்த்தான் நிறுவனத்தின் மீதும், நிர்வாக இயக்குனர் சுனில் கிருஷ்ணா கெய்த்தான் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் என 13 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி