உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக தீரத் சிங் ராவத் ஆட்சி செய்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து அவர், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. டாக்டர்களின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிகையாக இருங்கள். பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்துக்குப் பதில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி தான் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்