தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாகவும், தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறிய அவர் “வரும் 24ஆம் தேதி கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, சுர்ஜிவாலா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டியில் ஆலோசனை முடித்த பிறகு 25-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். தொகுதிப் பங்கீடு முடித்தபிறகு ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை இடங்கள் போட்டியிடுவது என்பது அப்போது ஆலோசிக்கப்படும். தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது “என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் “பேச்சுவார்த்தை விரைவில் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் எனும் ஊகத்தை நான் வெளியில் சொல்வது நியாயமல்ல. ஏனெனில், பேசுவதற்கு மூத்த தலைவர்கள் வர உள்ளனர். திமுக தலைவர்களுடன் பேச தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் நானும் செல்லவிருக்கிறேன்“ என்றார்.
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை