கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்பதற்கான பீடத்தின் கட்டுமானப்பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் முறையான கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எம்.பி. ஜோதிமணி தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஜோதிமணி சொன்னார். இதனால் ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்தனர்.
பின்னர் பேசிய ஜோதிமணி “இந்த அரசு எம்.பி. மீது கைவிக்கவில்லை. தமிழகத்தின் ஒரு பெண் மீது கைவைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
pic.twitter.com/L3bZTDeJVF — Jothimani (@jothims) February 20, 2021
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?