உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த 46 வயதான மஹிபால் சிங் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பத்தற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார் அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி.
இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“அவருக்கு சனிக்கிழமை பகல் நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு முழுவதும் அவர் பணியை கவனித்தார். ஞாயிறு அன்று நெஞ்சு வலிப்பதாக சொல்லிய அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் தலைமை மருத்துவ அதிகாரி.
அவருக்கு உடற்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவரது மரணத்திற்கு Cardio-Pulmonary நோய் இருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?