டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் இன்று நடந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் அதிகாரம், தொழிலாளர் முன்னேற்ற கழகம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மட்டுமின்றி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், சோமரசம்பேட்டை, புள்ளம்பாடி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறும்போது, "வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இதில் உள்ள பாதகங்களை உணர்ந்து, மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய 'சூழ்நிலை' காரணமாக இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார்" என்றார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு