கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விஜயகாந்த் வீட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த செப்.22ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ளதாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை செய்தி குறிப்பு வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் 54ஆம் எண் கொண்ட விஜயகாந்த் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்கும் விதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர்.
அப்போது, விஜயகாந்த் இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டாம் எனவும் சிறிது நேரம் காத்திருங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விஜயகாந்த் வீட்டின் பணியாளர் தனது செல்போனை ஸ்டிக்கரை ஒட்ட வந்த பணியாளரிடம் கொடுத்து பேச சொல்லியுள்ளார். செல்போனில் பேசிய பின் ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சி பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல் திரும்பி சென்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசின் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?