ரயில்களில் வெளிமாநிலம் செல்லும் புலம் புயர்ந்த தொழிலாளர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வெளிமாநிலத்தவர்கள்
அவர்களின் சொந்த ஊர் திரும்புவதற்கு அரசு உதவாத பட்சத்தில், அவர்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை காங்கிரஸ் கட்சியே செலுத்தும் என்றும் இது குறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ரயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்களை ஏற்றிக்கொண்டு பீகாருக்குச் செல்ல தயாராக இருந்தது. இதனையடுத்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரிந்தர் ராஜா பயணிகள் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அளித்தார். அதில் நீங்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை சோனியா காந்தி அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ரயில் கிளம்பும் முன்னர் அமரிந்தர் ராஜா உரை ஒன்றையும் நிகழ்த்தினார் “ அதில் கடந்த வாரம் சோனியா காந்தி வெளிமாநிலத்தவர்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்றும் அறிவித்தார். அதன்படி பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் உங்களுக்கு இந்தப் பணத்தை அனுப்பியுள்ளார்கள்” எனக் கூறினார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் முதன் முறையாக ரயில் நிலையத்தில் எம்.எல்.ஏ பரப்புரையில் ஈடுபட்டது மலிவான விளம்பரம் என்று பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Loading More post
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
பெண் காவலரும், ஆண் காவலரும் ஒரே அறையில் இருந்ததற்காக டிஸ்மிஸ் செய்ய முடியாது: நீதிமன்றம்
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!