கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி காட்சி மூலம் கொரோனா நோய் தொற்று பற்றிய கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார். இதுவரை நடைபெற்ற காணொலிக் காட்சிகளில் பேசாத முதலமைச்சர்கள் இன்றைய தினம் பேசினர். நேரமின்மை காரணமாக பேசாத பிற மாநில முதலமைச்சர்கள் ஃபேக்ஸ் வாயிலாக கோரிக்கைகளை அனுப்ப பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஃபேக்ஸ் வாயிலாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். மேலும் உடனடியாக 1000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் சிறு குறு தொழில் துறையினர் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறு குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாதம் கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு