டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள், அருகே இருந்த கருப்பசாமி கோயிலில் மதுபாட்டிலை வைத்து படையலிட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயின.
கந்தர்வக்கோட்டையில் இருந்து செங்கிப்பட்டிக்குச் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 600 மதுபாட்டில்கள் கொள்ளை போயிருந்தன. அதோடு, கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலில் மதுபாட்டிலை படையலிட்டு வழிபாடு நடத்தியதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானங்கள் கிடைக்காததால் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின் அலட்சியம்?: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்
Loading More post
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!
ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்
பவுண்டரிகள் விளாசல் - அதிரடியாக சதத்தை நோக்கி செல்லும் ரிஷப் பண்ட்!
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!