தமிழகத்தின் 90 சதவீத வேலைகளை தமிழர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என சமூக வலைத்தளமான ட்விட்டரில் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்திற்கு வெளியே இன்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில், தமிழக வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் எனவும், அதற்காக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வெளிமாநிலத்தவர்கள் தமிழக உள்ளூர் வேலைகளில் அமர்வதால், படித்த தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்குகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஹேஸ்டேக் மூலம், தமிழக இளைஞர்களின் வேலையில்லா நிலை குறித்தும், வெளிமாநிலத்தவர்கள் தமிழக வேலைகளில் இருப்பது குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மற்ற மாநிலங்களில் இயற்றப்பட்டிருப்பது போல மாநில வேலைகளை சொந்த மாநிலத்தவர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’