நவராத்திரியை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாலும், 4 கிலோ தங்க கட்டிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல கோயில்களில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் பிரபலம்.
அதன்படி இந்த வருடம் நவராத்திரியை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாலும், 4 கிலோ தங்க கட்டிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்தச் சிறப்பு அலங்காரத்தை திரளான பக்தர்கள் தரிசித்து கன்னிகா பரமேஸ்வரியை வழிபட்டனர்.
கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!