ஆலப்புழாவில் உள்ள கோயிலில் நடிகர் விகரம் உடன் செல்பி எடுக்க பலரும் முண்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலப்புழாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கோயிலில் ‘காவடி’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். அவர் பூஜை செய்வதை போன்ற காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன. பலரும் இந்தக் கோயிலில் இருந்தக் கூட்டத்தை பார்த்து ஏதோ திருவிழா என நினைத்தனர். ஆனால் அருகில் சென்று பார்த்த போது கேமிரா மற்றும் லைட்கள் வைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த பொதுமக்கள் அங்கே குழும தொடங்கினர். அதுவும் விக்ரம் அங்கே இருப்பதை உணர்ந்தவர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டி அடித்தனர். அவ்வளவு பேரும் குவிந்ததால் அங்கே கொஞ்ச நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் கோயில் என்றும் பார்க்காமல் பல இளைஞர்கள் செல்பிக்கு முக்கியத்துவம் கொடுத்தது அங்கே சாமி தரிசனத்தில் இருந்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை