ஹத்ராஸ் செல்லும் அரசியல் தலைவர்களை, மக்களை தாக்கி தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்று கூட திருணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி தாக்கப்பட்டிருக்கிறார் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக பேசிய அவர் “ உத்தரபிரதேசத்தில் மோசமாக நடைபெற்றுள்ள வன்முறையை மூடிமறைக்க தான் அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. குடும்பத்தினரை நெருங்க விடாமல் வீட்டில் வைத்து பூட்டி இறுதி சடங்கை காவல்துறையினரே நடத்தியுள்ளனர். இதை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள் பாடு படுத்தபட்டுள்ளார்கள். அங்கு செல்லும் அரசியல் தலைவர்களை, மக்களை தாக்குவதும், தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட திருணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி தாக்கப்பட்டிருக்கிறார். மோசமாக நடத்த பட்டிருக்கிறார். மூடி மறைப்பதற்கான முயற்சியில் தான் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது” என்றார்
மேலும்” மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியை மக்களிடம் திணிக்கிறது பாஜக. இந்தி திணிப்பை மும்முரமாக செய்துவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!