2ஜி வழக்கின் தீர்ப்பை திருத்தம் செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர்!

2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தெளிவு தேவை என மத்திய அரசு தாக்கல் செய்த மனு பட்டியலுக்காக வந்தபோது அதை உச்சநீதிமன்ற பதிவாளர் நிராகரித்துள்ளார்.
2ஜி
2ஜிட்விட்டர்

கடந்த 2012ஆம் ஆண்டு 2ஜி முறைகேடு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களையும் உச்ச நீதிமன்றம் அப்போது ரத்து செய்திருந்தது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை எனக் கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

’ஏலத்திற்குப் பதிலாக சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக நடைமுறைகள் மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்கவேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல் தேசப்பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த மனு பட்டியலுக்காக வந்தபோது அதை உச்சநீதிமன்ற பதிவாளர் நிராகரித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு 2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, உச்சநீதிமன்ற விதிகள் 2013ன் ஆணை XV விதி 5 இன் கீழ், பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நியாயமா இது! ரன் ஓடாமல் ’திரும்பிப் போ’ எனக் கத்திய தோனி.. நூலிழையில் தப்பித்த மிட்செல்! #ViralVideo

2ஜி
2ஜி முறைகேடு வழக்கு | தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி மத்திய அரசு மனு!

இதுகுறித்து உச்சநீதிமன்ற பதிவாளரின் உத்தரவில், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்ததில், விண்ணப்பதாரர் தற்போதைய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறோம் என்ற போர்வையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார் என்பது தெளிவாகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பதிவாளரின் உத்தரவை எதிர்த்து 15 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்து விசாரிக்க கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. அவ்வழக்கும் தற்போது விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாரணாசி| பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடி நடிகர்.. யார் இந்த ஷியாம் ரங்கீலா?

2ஜி
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி.. விசாரணை எப்போது தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com