தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் பல்வேறு வகையான தளர்வுகளுடன் எட்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் எளிதாக வெளியூர்களுக்குச் செல்வதற்கான வசதி ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி மக்களுக்கு ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. "ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே" என்று கூறியுள்ள அவர், "இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்" என்றும் அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.
ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.#lockdown #Unlock4 #Corona #TNLockdown— வைரமுத்து (@Vairamuthu) August 31, 2020Advertisement
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்