நிர்பயா கொலை குற்றவாளிகளுடன், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான அநீதிக்கு சட்டரீதியிலாக போராடும் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது ட்விட்டரில், நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் வேதனையை தாம் முழுமையாக அறிவதாகவும் எனினும் ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளி நளினியை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். நிர்பயாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மரண தண்டனையை தாம் எதிர்ப்பதாக இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று தனக்குப் பரிந்துரை செய்ய இந்திரா ஜெய்சிங் யார்? என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடும் கண்டனம் தெரிவித்தார். “ நாடே குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில் இவர்களைப் போன்றவர்களால்தான் நீதி கிடைப்பதில்லை. இந்திரா ஜெய்சிங் இவ்வாறு கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை பலமுறை உச்ச நீதிமன்றத்தில் நான் சந்தித்துள்ளேன். ஆனால் ஒருமுறை கூட என்னுடைய நிலை குறித்து அவர் கேட்டதில்லை. அப்படி இருக்கையில் இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது போன்றவர்களால் தான் பாலியல் குற்றங்கள் குறைவதில்லை. குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வரை எனக்கு நிம்மதி இல்லை” என்று தெரிவித்தார்.
சீனாவிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, நிர்பயா குற்றவாளிகளுடன் 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபோன்ற பெண்கள்தான் அசுரர்களையும் கொலையாளிகளையும் பெற்றெடுக்கின்றனர் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!