குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஆஜரான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறுதேர்வு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதி மாநில அளவில் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்ற 57 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. சம்மன் அனுப்பியிருந்தது. அதில் 20 பேர் விசாரணைக்காக டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அதேபோல், முறைகேடு புகார் தொடர்பாக 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வு தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களும் ஆஜராகினர்.
மனைவியை கொன்றுவிட்டு 3 ஆண்டுகளாக நாடகமாடிய கணவர் - உண்மையை கண்டுபிடித்த சிபிசிஐடி
அவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டனர். தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருவராஜூவும் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு ஆஜரான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறுதேர்வு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பபாசி நடவடிக்கை ஏற்புடையது அல்ல” - உதவித் தலைவர் கண்டனம்
மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களையும் அழைத்து, தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!