ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. அதேபோல், போராட்டத்தின் போது சில பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால், பதட்டமான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.
டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு மாணவர் அமைப்பினர் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் தடியடி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “தொடர் போராட்டங்களை கவனத்தில் கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தவர்களும் அதனை ஆதரித்தவர்களும் பதில் சொல்லியாக வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!