கீழடி நம் வரலாறு. அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் கீழடி வைகை நதி நாகரிகம் சிறப்பு மாநாட்டில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ கீழடி உண்மையில் வெற்றியடைந்ததற்கு காரணம் சு.வெங்கடேசன். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு அகழாய்வின்போதே கீழடியை நேரில் சென்று பார்த்துள்ளேன். கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்து கொண்டேன். அவ்வளவு அர்ப்பணிப்போடு, உழைப்பை புகுத்தி அகழாய்வை செய்து வருகின்றனர்.
கீழடியில் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அகழாய்வுக்கு பொறுமை தேவை. அந்த பொறுமையோடு அகழாய்வை மேற்கொண்டு வருகின்றனர். கீழடி நம் வரலாறு அதை விட்டுக்கொடுக்க கூடாது. கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைத்தால் பொதுமக்கள் வரலாற்றை அறிந்துகொள்வார்கள். அது சிறப்பாகவும் இருக்கும். கீழடி நம் வரலாறு. அது பாடமாக வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!