செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி PT WEP

“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” - அமலாக்கத்துறை புகார்!

செந்தில் பாலாஜி விசாரணையில் ஒத்துழைக்க மறுப்பு: அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தகவல்

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக
மோசடி என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை,  சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிமுகநூல்

இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “விசாரணையை முடக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
விவிபேட் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! முக்கிய அம்சங்கள் இதோ...

இதையடுத்து வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும்
அமலாக்கத்துறை தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 21ம்
தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com