ராஜஸ்தானில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
அதிக எடையை ஏற்றிச்சென்றதற்காக ரூ.1 லட்சம் அபராதமும், மற்ற விதி மீறலுக்காக 41 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது. போலீசார் விதித்த அபராதத் தொகையை லாரி உரிமையாளர் பகவான் ராம் செலுத்தினார். அவர் அபராதம் செலுத்திய ரசீது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்