பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் டெல்லி உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நட்டாவிற்கு அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜே.பி.நட்டா கடந்த பாஜக ஆட்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதால் அவர் வகித்து வந்த பாஜக தலைவர் பதவி வேறொருவருக்கு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற பாஜக தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் பாஜக தலைவராக அமித்ஷாவே நீடிப்பார் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், செயல் தலைவராக நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்