''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' தான் என்று குறிப்பெழுதி வைத்த பள்ளிக்குழந்தையின் குறிப்பு இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
நிறுத்தப்பட்டிருக்கும் காரை யாராவது இடித்து சென்றுவிடுவது பொதுவான ஒன்று. இடித்தது யார் என்று தெரியாமல் காரின் உரிமையாளர்களும் கடந்து சென்றுவிடுவர். ஆனால் அமெரிக்காவில் இடிக்கப்பட்ட காருக்கு அருகே வைக்கப்பட்ட குறிப்பில் காரை இடித்தது யார்? எப்படி இடித்தது? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் எழுதப்பட்டிருந்தது. பள்ளிக்குழந்தை எழுதி வைத்த அந்த குறிப்பு தற்போது வைரலாகியுள்ளது.
Read Also -> பாகிஸ்தான் சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டிரிவ், தனது கார் ஓரம் இடிக்கப்பட்டு நெளிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் சென்று பார்த்த போது காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று இருந்துள்ளது. அந்த குறிப்பை எழுதியது ஒரு பள்ளிக்குழந்தை என்பது அந்த எழுத்து நடையிலேயே தெரிகிறது. ஆண்டிரிவ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த குறிப்பை பகிர அது தற்போது வைரலாக பரவியுள்ளது.
Read Also -> நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!
அந்த குறிப்பில், ''உங்கள் காருக்கு என்ன நடந்தது தெரியுமா? 449 எண்ணையுடைய பேருந்து உங்களது காரை இடித்தது. அந்த பேருந்து என்னை தினமும் மாலை 5 மணிக்கு இங்கே அழைத்துவரும். பேருந்தை வெளியே எடுக்கையில் உங்கள் காரை அவர் (ஓட்டுநர்) இடித்துவிட்டார். அவர் தப்பிவிட்டார். நான் நடந்ததை பார்த்துக்கொண்டு இருந்தேன் ''என்று அந்த குறிப்பில் குழந்தைகளுக்கே உரிய எழுத்துநடையில் எழுதி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருகே பேருந்தின் படம் வரையப்பட்டு பேருந்தில் ஜன்னல் வழியாக மாணவர்கள் அதிர்ச்சி அடைவது போன்ற முகபாவங்களும் வரையப்பட்டுள்ளது.
Read Also -> மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
இந்த குறிப்பை ட்விட்டரில் பகிறும் பலரும் இந்த குறிப்பை எழுதிய குழந்தை மிகப்பெரிய ஓவியனாக வருவார். காரை பேருந்து இடித்தபோது மாணவர்கள் அதிர்ச்சியில் வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த ஓவியத்தில் மாணவர்களின் அதிர்ச்சி முகமும் பேருந்து ஜன்னலில் தெரிகிறது என்று நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்