இதுவரை சாய் பல்லவி பாடல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் 15 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
சாய் பல்லவியும் வருண் தேஜும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஃபிடா’. இதனை சேகர் கம்முலா இயக்கி இருக்கி இருந்தார். இது கடந்த ஆண்டு வெளியானது. இந்த இயக்குநர் இயக்கும் பல படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவர் இயக்கிய ‘அநாமிகா’ கூட தமிழில் ஏற்கெனவே வெளியாகி உள்ளது. தெலுங்கில் இவரது ‘லீடர்’ மாபெரும் ஹிட் ஆனது. ‘ஆனந்த்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினை பெற்றவர் கம்முலா.
இந்நிலையில் ‘ஃபிடா’ படத்திற்கான ‘வசிண்டே’ பாடல் சமூக வலைத்தளமான யுடியூப்பில் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற சாய் பல்லவியின் ஆட்டம் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இந்தப் பாடலை இதுவரை 150 மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். தென் இந்திய படங்களில் இதுவரை வெளியான எந்தப் படத்தின் பாடலும் இந்த அளவுக்கான அமோக ஆதரவை பெற்றதில்லை. அதாவது 15 கோடி ரசிகர்கள் ஒரே பாடலை பார்த்துள்ளது இதுவே முதல் தடவை. இந்தப் பாடலை மதுப்ரியா மற்றும் ராம்கி பாடியுள்ளனர். இதற்கு ஷக்திகாந்தி கார்த்திக் இசையமைந்துள்ளார். பாடல் வரிகளை சுத்தால அசோக் தேஜ் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவிதான் முக்கிய கதாப்பாத்திரம். 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 90 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிசில் ஹிட் ஆனது.
‘ஃபிடா’ ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம். வெளிநாட்டுவாழ் பெண் ஒருவர் தெலுங்கானா வந்து வசிக்கிறார். சாய் பல்லவி ‘தெலுங்கானா பெண்ணாக’ இதில் வாழ்ந்திருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையிதான் இந்தப் பாடல் 15 கோடி ரசிகர்களை இதுவரை ஈர்த்துள்ளது.
சாய் பல்லவி, தமிழிலும் இப்போது பிசியாக நடித்து வருகிறார். தனுஷ் ‘மாரி2’, சூர்யா ‘என்ஜிகே’ எனப் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘போடி போடி லேசே மனசு’ விலும் நடித்து வருகிறார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!