தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சென்னை வந்துள்ளார். அவரது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், அனைத்துப் பிரிவு தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்வரும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், வெற்றிபெறும் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்குமாறு 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நுழைவு வாயிலில் இருந்தவர்களிடம் கேட்டனர். அழைப்பு உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக கூறப்பட்டதால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைத்தார். புதிய மேலிடப் பொறுப்பாளரான சஞ்சய்தத், அலுவலகத்தில் இருந்தபோதே நடைபெற்ற இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “அழைப்பில்லாமல் வந்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டனர். எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூறுகையில், “கோஷ்டி மோதல் ஏதுமில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கட்சியினர் ஒன்றாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கட்சியினர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர்” என்றார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!